உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்..!

ரஷ்யா உக்ரைன் இற்கு இடையிலான போர் இரண்டு வருடத்திற்கு மேலாக இடம் பெற்று வருகிறது.

இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதே வேளை இப்போரின் காரணமாக உலக பொருளாதாரம் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உக்ரைனின் தலைநகர் கிவ் மற்றும் கார்கிவ் ஆகிய நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ,மேலும் பலர் கட்டிட இடிப்பாடுகளுக்குள் சிக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைனிற்கு அமெரிக்கா ஆயுத உதவிகளை வழங்கி வருகின்ற நிலையில் ,போலந்தும் தனது ஆதரவினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *