கிராமத்து உணவு-எழுதுவது கவிஞர் கேலோமி

மாலை
மயக்கும்
வேளை
இதமான
தென்னை
ஊசலாட்டத்தில்
மா
வேம்பு
புங்கை
மரங்களின்
அசைவில்
வீரியப்பட்ட
தென்றல்
காற்று
ஆடு
மாடு
கோழிகளின்
நிசப்த
சலனத்தில்
கட்டில்
மேல்
வைக்கப்பட்ட
வட்டில்
அதன்
மேல்
வைக்கப்பட்ட
உணவு
அது
எதுவானால்
என்ன?
எல்லாம்
அமிர்தம்
தான்.
நிலவு
மேல்
மயக்கும்
குடும்ப
கூட்டில்
மரபுகளாய்
வழி
வந்த
நமது
தலைமுறை
மற்றும்
பையன்
பெண்
அன்பில்
மனைவியின்
மயக்கத்தில்
முன்னோர்களின்
நினைவில்
ஓர்
கைப்பிடி
பழைய
சாதத்துடன்
வெங்காயம்
தயிர்
பச்சைமிளகாய்
மாவடு
தருகின்றேன்.
உண்ண
வா!
நிலவே!
சந்திராயனுக்கு
வழிவிடு.
இல்லை
நீ
ஒருமுறை
வந்து
போ!
கேலோமி🌹🌹
மேட்டூர் அணை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *