40 ஆயிரத்திற்கும் அதிகமான போலி வைத்தியர்கள்…!

இருக்கின்ற துறைகளிலே மிக உன்னதமான துறை தான் வைத்திய துறை. மக்கள் கடவுளாக எண்ணும் ஒருத்தர் தான் வைத்தியர்கள். அவர்களை நம்பி தான் மக்கள் அவர்களிடம் வருகிறார்கள். இப்படியாப்பட்ட வைத்திய துறையில் தற்பொழுது போலி வைத்தியர்களும் உள் நுளைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும், 40 ஆயிரத்துக்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

பல பிரிவுகளை பிரதிநிதித்துவப்படும் அவர்கள் எந்தவொரு தகைமையும் இன்றி நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதாக தெரிய வந்துள்ளதாக அதன் ஊடக பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார்.

இது பாரிய பாரதூரமான விடயமாகும். குறித்த விடயம் தொடர்பில்,பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஊசிகள் ஏற்பட்டு வைத்திய சாலையில் பலர் இறந்த சம்பவங்கள் பதிவாகியிருந்தது. இதன் காரணமாக மக்கள் வைத்தியசாலைக்கு செல்ல அச்சம் வெளியிட்டு இருந்தனர் .இந்நிலையில் போலி வைத்தியர்கள் இருக்கின்ற தகவலானது மக்கள் மேலும் அச்சமடைய வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *