தேரர் தாக்கியதில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி..!

கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகஸ்தர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

கடந்த 16 ம் திகதி பல்லேகம வில் அமைந்திருக்கும் விஹாரை ஒன்றில் பணிபுரியும் தேரர் ஒருவர் தனிப்பட்ட தகராறின் காரணமாக குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளார்.

இதனையடுத்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் தான் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த தேரரின் சகோதரியுடன் காதல் தொடர்பில் இருந்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை தாக்குதலை நடத்திய தேரரை தெனியாய பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *