6வது தடவையாக உலக கிண்ணத்தை தனதாக்கியது அவுஸ்திரேலிய அணி..!

13வது உலக கிண்ணத்தை அவுஸ்திரேலிய அணி சுவீகரித்து சென்றுள்ளது.இதன் மூலம் 6வது தடவையாக உலக் கிண்ணத்தை தனதாக்கிய பெருமையை அவுஸ்திரேலிய அணி பதிவு செய்துள்ளது.

இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இறுதி போட்டியில் அவுஸ்திரேலிய இந்திய அணிகள் பலபரீட்சை நடத்தின.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. இதற்கமைய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.இதில் ரோஹித் சர்மா 47 ஓட்டங்களையும்,விராட்கோஹோலி54ஓட்டங்களையும்,கே.எல். ராகுல் 66 ஓட்டங்களையும் பெற்றனர். மற்றையவர்கள் பெரிதாக சோபிக்க வில்லை. இதற்கமையா இந்திய அணி 50ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களை பெற்றது.

இதே வேளை 241 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 241 இலக்கினை அடைந்து உலக கிண்ணத்தை சுவீகரித்து சென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *