விராட் கோஹோலியின் ரசிகர் கைது..!

நேற்றைய தினம் உலக கிண்ண இறுதி கிரிக்கெட் போட்டி நடைப்பெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றது.241 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 6 விக்கட்டுக்களால் இந்திய அணியை தோற்கடித்து வெற்றி மகுடம் சூடியது.இவ்வெற்றியானது 6வது முறையாக பெற்ற வெற்றியாக பதிவு செய்யப்பட்டது.

இதே வேளை இந்திய அணி துடுப்பெடுத்தாடிய தருணம்14 வது ஓவரின் போது ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுளைந்து விராட்கோஹோலியை நோக்கி ஓடி வந்தார் .இவரை பொலிஸார் தடுத்து கைது செய்தனர்.குறிப்பிட்ட ரசிகர் விராட்கோஹோலியின் தீவிர ரசிகர் என விசாரணையில் தெரியவந்தது.இவர் முகமூடி அணிந்திருந்ததுடன் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான டீ சேர்டினை அணிந்திருந்தார்.

விளையாட்டின் போது ஆடுகளத்திற்குள் நுளைந்து இடையூறு விளைவித்ததன் அடிப்படையில் குறித்த ரசிகரை கைது செய்து மேலதிக விசாரணைகள் நடைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *