இலங்கை பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன…!

ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் சூப்பர் நான்கு சுற்றில் இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டி இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

இப்போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக அமையவுள்ளதோடு இதில் வெற்றி பெறும் அணி இந்திய அணியுடன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவுள்ளது.

இதே வேளை இந்திய இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணி பெரிதாக சோபிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இன்றைய போட்டியில் முழு முயற்சியும் கொடுத்து விளையாடுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை இலங்கையில் பருவ பெயர்ச்சி மழை ஏற்பட்டுள்ளதால் .இன்றைய தினப்போட்டியிலும் சில வேளை மழை குறுக்கிடும். சில வேளை மழை குறுக்கிடாமல் இருந்தால் ஒரு விறுவிருப்பான போட்டியை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *