நெசவாளர்களின் கை வண்ணம்..!

ஆடை

நெசவாளர்களின் கை வண்ணமே!
மனிதர்களின்
மானத்தை
காவல் காக்கும்
பொக்கிஷமே!


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்துணர்ச்சி தருபவளே!
கடையில் உன்னைக் காணும் எல்லோரும் உன்னை ரசித்தபடியே செல்வர்
உன்னை பார்த்து விட்டால் யாருக்குமே போக மனம் இருக்காது!


அனைத்து விசேஷங்களிலும் முதன்மையானவள் நீ தான்!


குழந்தைகளுக்கு மகிழ்ச்சி அளிப்பவள் நீதான்!


தீபாவளி,பொங்கல் விழாக்களில் புதுமைப் படைப்பவள்
நானும் உன்னை ரசித்துக் கொண்டே விடைபெறுகிறேன் மகிழ்ச்சியுடன் ….

*கவிஞர் நிலவுத்தோழி ஆர் ஜே உமாதேவி*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *