இராணுவ வீரர்களின் காதல்..!

காஷ்மீரத்து பனி மலையில்
முற்றிலும் உறையாமல்
உறைந்து தான் கிடக்கிறான்
வீரு கொண்ட எங்கள் வீரக் காளை …

அவன் மனம் ரணப்பட்டுக்
கிடக்கிறது பிரிவின்
வேதனையால் …

தாய் முகம் , தந்தை முகம் ,
தான் தொட்டுத் தழுவிய
மனைவியின் முகம் ,
இருவரும் சேர்ந்து தழுவிப்
பரிசாய் பிறந்த சேயின் முகம்
காணாச் சோகத்தில் …

ஆம் அவன் மனம் எப்போதும்
இரணப்பட்டுத்தான் கிடக்கிறது …

என் நாட்டு மக்கள் யாரும்
இரணப்படக் கூடாது எனும்
தேசத்தின் மேல் வைத்த
ஓர் உயர்வான காதலால் …

🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *