விடுதலை வேட்கை..!

அந்தச் சின்னஞ்சிறு வயதில்
எந்த இடத்திலும் அடைபட
விரும்பாத மனம் …!


சிறகடித்துப் பறக்கும்
பட்டாம் பூச்சியாய்
வாழ்வை அனுபவிக்க
விரும்பும் விடுதலை
வேட்கை …!


எப்படியோ ஒரு வழியாய்
கூண்டுக்குள் இருக்கப்
பழகிய போது…!


சக தோழர் , தோழியர்
கூட்டணிக் குதூகலத்தில்
பிடித்துப் போனது
பள்ளியின் தொடக்க காலம் …!


பிறகு அதுவே வாழ்வெனப்
பழகியும் போனது …!


பிறகு படிக்கப் படிக்க
மனனம் செய்து ஒப்பிக்க …!


காலங்கள் ஒன்று , இரண்டு என
என்னை ஒன்பதாம் வகுப்பு
வரை கைபிடித்துக் கூட்டிச்
சென்றது …!

நூலகமோ என்னை
என்னிடம் வா !

என்னிடம் வா !


என அழைத்து …!

கதைகளைச்
சொல்லி கவிதைகளைப் பாடி
வெளியுலகைக் காட்டியது …!


அறிவும் அறிவோடு சேர்ந்த
குழப்பமுமாக இருந்த என்னை
தியானம் தன்னோடு சேர்த்துக்
கட்டி அணைத்தது …!

ஆஹா
உள் உலகமும் தெளிவுபடத்
தெரியத் தொடங்கிய பின்
குழப்பம் முடிந்தது ….!

இப்போது
நான் என்னவாக இருந்தால் என்ன
நான் என்னோடு இருக்கிறேன்
என்பதே ஆனந்தம்
தானே …!

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *