8வது தடவையும் ஆசிய கிண்ணம் இந்தியா வசம்..!

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கட்டுக்களால் அபார வெற்றி பெற்று 8வது முறையாக கிண்ணத்தை தனதாக்கி கொண்டது.

போட்டி ஆரம்பித்து 30 நிமிடங்களுக்குள் இப்போட்டியானது நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பலரும் எதிர்ப்பார்த்த இந்த போட்டி இப்படி முடிந்ததால் ரசிகர்கள் அதிர்ப்தி வெளியிட்டுள்ளனர்.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.இதற்கமைய 15.2ஓவர்களில் 50 ஒட்டங்களை மாத்திரம் பெற்று அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. இதனையடுத்து களமறங்கிய இந்திய அணி 6.1ஓவரில் 51 ஓட்டங்களைப்பெற்று 10 விக்கட்டுக்களால் வெற்றிப் பெற்று ஆசிய கிண்ணத்தை தனதாக்கியது.

இதன் மூலம் 8வது ஆசிய கிண்ணத்தையும் இந்திய சுவீகரித்துள்ளது.

இப்போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமையானது இலங்கையணி வரலாற்றில மிக மோசமான தோல்வியாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *