தனக்கு கிடைத்த் பணபரிசினை மைதான பணியாளர்களுக்கு வழங்கிய இந்திய வீரர்..!

நேற்றைய தினம் இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் ஆசிய கிண்ண இறுதி போட்டி நிகழ்ந்தது. இதன் போது இந்திய அணி 10 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது.

இதன் போது இந்திய வீரரான முஹமட் சிராஜ் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார். அப்போது அவருக்கு கிடைத்த US 5000 தொகையை மழை இடர்பாடுகளில் கடும் பாடு பட்டு மைதானத்தை தயார் படுத்திய மைதான பணியாளர்களுக்கு வழங்கி வைத்தார்.

இந்த விடயம் அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.விளையாட்டினையும் தாண்டி நல்லுள்ளம் படைத்த ஒரு மனிதர் என்பதை மிக அழகாக காட்டி நிற்கின்றது.

இதற்காக இலங்கை பணியாளர்கள் மற்றும் ரசிகர்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *