சச்சின்,தோணி,யுவராஜ் இவர்களின் ஆலோசனைகள் பலமாக அமையும் …!

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்தியாவில் நடைப்பெற இருக்கும் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் 10 நாடுகள் பங்கேற்க உள்ளன.

இதில் இந்திய அணி நடப்பு செம்பியனான அவுஸ்திரேலிய அணியினை சென்னையில் வைத்து சந்திக்கிறது.

இத்தருணத்தில் இந்திய அணியின் சச்சின் டெண்டுல் கார் ,தோணி,யுவராஜ் ஆகியோர்களது ஆலோசனைகள் இந்தி அணிக்கு பலமாக அமையும் என அவுத்திரேலிய அணியின் முன்னாள் வீரர் எடம் கில்கிரிஸ்ட் தெரிவித்துள்ளார்.

இந்திய மண்ணில் விளையாடப்படும் போட்டியில் இந்திய அணி வெற்றி கிண்ணத்தை பெற இவ் ஆலோசனைகள் உறுதுணையாக அமையும் என தெரிவித்துள்ளார்.

இரண்டு அணிகளுமே மிக சிறப்பாக விளையாட கூடிய அணிகள் ,இந்திய மண்ணில் கிரிக்கெட் போட்டிகள் நடைப்பெறுவதால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்புகள் பலமாக இருக்கின்றது என்றும் பலராலும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அவுஸ்திரேலிய அணியும் மிக சிறப்பாக விளையாடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *