மரம் முறிந்து தலையில் வீழ்ந்ததில் மாணவி உயிரிழப்பு..!

மரம் முறிந்து தலையில் வீழ்ந்ததினால் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கண்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது தந்தையுடன் வந்த மீண்டும் அக்கரப்பத்தனையிற்கு தந்தையுடன் பைக்கின் பின்னால் சென்றுக்கொண்டிருக்கும் போது தலவாக்கலை பூண்டுலோயா பலுவத்த என்ற பிரதேசத்தில் வைத்து மரம் முறிந்து வீழ்ந்ததில் படுங்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கு குறித்த மாணவி உயிரிழந்துள்ளார்.

அக்கரப்பத்தனை பம்பரகலே அபகன்லி தோட்டத்தில வசித்த விஜயராஜ் திவ்யராணி என்ற 17 வயது மாணவியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மரமானது தலையில் வீழ்ந்துள்ளமையாலே குறித்த மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைப்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *