4 மாத குழந்தை உயிரிழப்பு..!

குளியாப்பிட்டிய போதனா வைத்திய சாலையில் குழந்தை ஒன்று உயிரிழந்துளளதாக தெரிவிக்கப்படுகிறது.

படுவஸ்நுவர மேற்கு சுகாதார பிரிவிற்குற்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

04 மாதங்கள் நிறைவடைந்த பின்னர் வழங்கப்படும் தடுப்பூசி செலுத்தப்பட்டு ஒரு நாளின் பின்னர் திடீர் சுகவீனம் காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

நேற்று முன்தினம் குறித்த குழந்தைக்கு படுவஸ்நுவர மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் 4 மாத தடுப்பூசி போடப்பட்டது.

தடுப்பூசி போட்ட பிறகு குழந்தைக்கு பொதுவான காய்ச்சலுக்கான அறிகுறிகளும் தென்பட்டது, தேவையான சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், நேற்று காலை வரை உடல்நிலை மோசமடைந்தது.

உடனடியாக குழந்தையை குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க பெற்றோர் நடவடிக்கை எடுத்த போதிலும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரேத பரிசோதனைக்காக படுவஸ்நுவர வைத்தியசாலையில் இருந்து குருநாகல் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரேத பரிசோதனையின் பின்னரே தடுப்பூசி மரணத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதா என்பது குறித்து முடிவெடுக்க முடியும் என வைத்தியசாலை வட்டாங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *