பல்கலை கழக மாணவன் உயிரிழப்பு..!

நீச்சல் தடாகத்தில் நீராட சென்ற 21வயதுடைய பல்கலைகழக மாணவன் உயிரிழந்துள்ளார்.முருகதாஸ் டிலக்ஷன் என்ற மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த ரஜரட்டை பல்கலைகழகத்தில் விஞ்ஞான பீட முதலாம் ஆண்டு மாணவனே உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் தனது நண்பர்களுடன் நீச்சல் தடாகத்தினுள் பிரவேசித்துள்ளார். எனினும் நீச்சல் தடாகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அறிவித்தல்களை பின்பற்றாமையால் தான் குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக ரஜரட்டை பல்கலைகழக துணைவேந்தர் சஞ்ஜீவனி கினிகத்தர தெரிவித்துள்ளார்.

இதே வேளை துரித கதியில் மிஹிந்தலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் ,குறித்த நபர் ஏற்கனவே உயிரிழந்துளளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் உயிரிழந்த மாணவனின் தாயார் தனது பிள்ளை மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவன் புலமை பரிட்சையினூடாக பல்கலைகழகம் சென்றுள்ளதாகவும் ,கால்பந்து விளையாட்டிலும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தாயார் தெரிவித்துள்ளார்.இவர் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியில் பயின்று பல்கலைகழகத்திற்கு தெரிவானவர் என்றும் ,படிபை குறிக்கோளாக கருதி செயற்பட்டவர் என்றும் தயார் தெரிவித்துள்ளார்.

2இச்சம்பவம. தொடர்பாக மிஹிந்தலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *