ரயிலில் பாய்ந்து யுவதி தற்கொலை..!

இன்றைய தினம் ஓடும் ரயிலில் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் மோதியே குறித்த யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கணபதி அனுஷா தர்சனி என்ற 28 வயதுடைய தலவாக்கலை டயகம பிரதேசத்தை சேர்ந்தவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் ஹட்டனில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் என்றும். 5 வருடமாக காதலித்து வநத இளைஞரை காலை சந்திக்க வருமாறு தொலைப்பேசியில் அழைத்திருந்ததாகவும்,அதற்கு குறித்த இளைஞர் மறுப்பு தெரிவித்த நிலையில் ஆத்திரமடைந்த யுவதி ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காதலனால் யுவதியின் சடலம் அடையாளம் காட்டப்பட்டதாகவும், பிரேத பரிசோதனைக்காக சடலம் கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *