மனிதன்-எழுதுவது கவிஞர் கேலோமி..!

ஓலை
வீட்டில்
மழை
ஒழுக
வாழ்ந்து
பழகினோம்.
வெயில்
காலத்தில்
ஒளி
ஒட்டை
வழியே
புகுந்து
சுட
பழகினோம்.
ஆயிரம்
பேர்
நாடு
இனம்
மொழி
சாதி
மதம்
என்று
தொண்டை
கிழிய
கத்தினர்.
சமத்துவம்
ஐனநாயகம்
சகோதரத்துவம்
என்று
பயின்றனர்.
எவளோ
ஒருத்தி
எவனோட
போனால்
என்று
சாதி
மத
கலவரத்தில்
எப்போது
வேண்டுமானால்
பற்றி
எரியலாம்
இந்த
வீடு.
அரசு
அரசியல்
மதம்
மொழி
சாதி
இவைகள்
பகடைகளே!
உருட்டுபவன்
எண்ண
ஓட்டம்
என்றும்
கீழானதே!
அரசு
வீடு
கட்டி
தரும்.
மத்திய
மாநில
அரசுகள்
தங்கள்
பிரதாபத்தை
அளக்கட்டும்.
அழியட்டும்.
நான்
தமிழனோ!
திராவிடனோ!
இந்தியனோ!
அடேய்!
நான்
மனிதன்.
மனிதநேயத்தோடு
என்ன
இந்த
உலகுக்கு
செய்ய
இருக்கின்றாயோ!
அதுவே
நிலைக்கும்.
ஓட்டுக்கு
பணம்
கொடுத்து
வயிறு
வளர்க்கும்
உன்னால்
ஒரு
சுரையை
கூட
விளைவிக்க
இயலாது.
எங்கள்
கண்ணீர்
வியர்வை
இரத்தம்
வறுமை
உங்கள்
வம்சத்தின்
சொத்து.
அது
சாபத்தின்
கறைகளின்
சரித்திரம்.
மனிதனாக
வாழ
பழகு.
வழி
விடு.
உலகம்
உய்யட்டும்.

கேலோமி🌹🌹🌹🌹🙏
மேட்டூர் அணை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *