பிறந்த குழந்தையை கொன்று வீசியவர்கள் கைது..!

குழந்தை செல்வம் என்பது ஒருவரம்.இது யாருக்கும் மிக இலகுவில் கிடைத்து விடுவதில்லை.

பலர் குழந்தை செல்வத்தை வேண்டி வைத்திய சாலை வைத்தியசாலையாகவும்,கோயில் கோயிலாகவும் ஏரி இறங்குகின்றனர் .
இவர்களது மனம் ஒரு குழந்தைக்காக ஏங்கும் அதை வார்த்தைகளால் சொல்லிவிடமுடியாது.

இவ்வாறான மக்கள் வாழும் இவ்வுலகில் தான் இதற்கு எதிர்மாறாக பல மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் தாம் பெற்ற குழந்தைகளை கொன்றும் , குப்பை தொட்டிகளில் வீசி எரிந்து செல்கின்ற சம்பவங்கள் அதிகம். இவ்வான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பிறந்த சிசுவை உடனடியாக வீதிக்கு கொண்டு வந்து கொன்று வீசிய கணவன் மனைவியை முல்லேரியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அக்குழந்தையின் தந்தையென கூறப்படும் நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

முல்லேரியா பண்டார மாவத்தை களனிமுல்ல தெருவில் உள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை கடந்த 08ம் திகதி இரவு சிசுவை பெற்றெடுத்துள்ளதுடன், சிசுவை கொன்று வீதிக்கு கொண்டு வீசியுள்ளதாக விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரத்தக் கறைகளைத் பின் தொடர்ந்து சென்ற பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்று ஜோடியை கைது செய்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகத்திற்கிடமான கணவனும் மனைவியும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *