லிந்துலை வலஹா தோட்டத்தில் குடும்பஸ்தர் பலி…!

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலஹா தோட்டத்தில் 40 வயதுடை நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீரசாமி பெஞ்சமின் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே அயல் வீட்டுக்காரரால் மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலை நடாத்தி கொலை செய்து விட்டு தலைமறைவாகிய 27 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *