03 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததன் அடிப்படையில் விஞ்ஞான பாட ஆசிரியர் கைது..!

நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் 29 வயதுடைய விஞ்ஞான பாட ஆசிரியர் ஆய்வு கூடத்தில் வைத்து 3 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிதுல்லே பல்லேடோவ பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான ஆசிரியரே கைது செய்யப்பட்டுள்ளார்.குறிப்பிட்ட ஆசிரியர் 09ம் தரத்திற்கு பொறுப்பான ஆசிரியரும் கூட,அவரே விஞ்ஞான பாடத்தை கற்பிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ் ஆசிரியரின் மனைவியும் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த ஆசியர் மாணவி ஒருவருடன் காதல் உறவில் ஈடுப்பட்டிருந்த நிலையில்,அந்த மாணவி ஊடாக மற்ற இரு மாணவிகளும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் வலப்பனை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மாணவிகள் மூவரும் ரிக்கிலகஸ்கட பொது வைத்தியசாலையில் சட்ட வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *