வெங்காயத்தினை பதுக்கி வைத்திருந்த களஞ்சியசாலை சுற்றி வளைப்பு..!

வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தை களஞ்சியசாலைகளில் மறைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக,

கிடைத்த தகவல் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள தனியார் களஞ்சியசாலையொன்றை சோதனையிட்டதில், பாகிஸ்தான், இந்தியா,

துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெருந்தொகையான வெங்காயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட வாடிக்கையாளர் சேவை அதிகாரசபை தெரிவிக்கிறது.

அங்கு பணிபுரியும் பணியாளர்களிடம் மொத்தமாக இறக்குமதி செய்யப்பட்ட நிறுவனங்கள் அல்லது விற்பனை வலையமைப்பு தொடர்பான,

சரியான தகவல்களை முன்வைப்பதற்கான குறிப்பிட்ட ஆவணங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளது.

இதன்படி, சம்பந்தப்பட்ட தரப்பினரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட உள்ளதாக மாத்தளை மாவட்ட வாடிக்கையாளர் சேவை அதிகார சபையின் தலைவர் திரு.ரேணுகா குமார தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *