மஹா ராணியை கொலை செய்ய முயற்சித்த இந்திய பிரஜைக்கு 9 ஆண்டுகள் சிறை..!

இங்கிலாந்தின் மகாராணியை கொலை செய்ய முயற்சித்ததிற்காக இந்தியர் ஒருவருக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தணடனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜஸ்வந்த் சிங் சைலு என்பவர் இங்கிலாந்தின் பககிங்ஹாம் அரமணைக்குள் சட்டவிரோதமாக நுளைந்து சென்ற வேளை அங்கு கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.குறித்த நபர் முக மூடி அணிந்து சென்றுள்ளார். இதன் போது பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதன் போது குறித்த நபர் 1919ம் ஆண்டு நடைப்பெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழி தீர்க்க மறைந்த 2ம் எலிசெபத் மஹா ராணியாரை கொள்ளும் நோக்குடன் தான் இங்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மனநலபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையிலேயே குறித்த நபர் தொடர்பான வழக்கு விசாரணை நடைப்பெற்று வந்தது. குறித்த நபருக்கு எதிராக ஆதாரங்கள் நிறுபிக்கப்பட்டதால் 9 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனை விதித்து நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *