விறகு கட்டையால் மனைவியின் தலையில் தாக்கிய கணவன்…!

காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள் அல்லது வீட்டில் பேசி திருமணம் முடிக்கிறார்கள் ஆனால் சிறிது காலத்தில் மனக்கசப்பு ஏற்பட்டு விடுகிறது.அதன் பிறகு சண்டை சச்சரவு,தாக்குதல் ,உயிரிழப்பு, இவர்களுக்கு பிறந்த குழந்தையின் எதிர் காலம் கேள்வி குறியாகிறது.இவ்வாறான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கம்பளை, லொக்குஅங்க வெலம்பொட பிரதேசத்தில் இன்று காலை 06.09.2023 கணவரால் விறகு கட்டையால் தாக்கப்பட்டு மனைவி உயிரிழந்துள்ளார்.

நீண்ட கால குடும்ப தகராறு காரணமாக 28 வயதுடைய கணவன் தனது 24 வயதுடைய இளம் மனைவியை விறகு கட்டையால் தலையில் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்துள்ள பெண் ஒன்றரை வயது பெண் குழந்தையின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த பெண்ணின் கணவரை வெலம்பொட பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *