குழியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு..!

வெள்ளம் நிரம்பிய குழியில் விழுந்து குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.இச்சம்பவமானது கிளிநொச்சியில் இடம் பெற்றுள்ளது.

கிளிநொச்சி பூநகரி நெடுங்குளத்தில் வெள்ளம் நிரம்பிய குழியிலேயே குறித்த குழந்தை தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்

இச்சம்பவம் 21ஆம் திகதி மாலை 05.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

புஸ்பராசா மிதுசனா என்ற ஒன்றரை வயது குழந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இறப்பு தொடர்பாக பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *