கிரேன் வீழ்ந்ததில் 15 பேர் பலி..!

கிரேன் இயந்திரம் வீழ்ந்ததில் 15 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்தியாவின் மராட்டிய மாநிலம் ,சர்லம்பி கிராமத்தில் வீதி அமைப்பதற்கான மேம் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.இதன் போது இன்று அதிகாலை கட்டுமானப்பணிகள் நடைப்பெற்ற சமையம் பாலத்தின் பாகங்களை தூக்கி வைக்க கிரேன் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் இன்று காலை திடீரென கிரேன் இயந்திரம் சரிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதன் போது பணியில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளர்கள் 15 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்து பகுதிக்கு விரைந்த பொலிஸார் மற்றும் மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்தனர்.இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *