முச்சக்கர வண்டிகள் கட்டணம் தற்போதைக்கு அதிகரிக்க படமாட்டாது..!

நேற்று நள்ளரவு முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் எரி பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கமைய முச்சக்கர வண்டிகளின் கட்டத்தை அதிகரிக்க முடியாது என முச்சக்கர வண்டிகளின் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ஒவ்வொரு மாதமும் எரி பொருட்களின் விலைகள் திருத்தப்படுவதால் முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றங்களை கொண்டு வரமுடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று நள்ளிரவு முதல் (31) மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் திருத்தத்துடன், ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதுடன், அதன் புதிய விலை 348 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையும் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 375 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *