மருமகனின் தாக்குதலில் மாமனார் பலி…!

யாழ்ப்பாணம் ,கரவெட்டி, நெல்லியடியை சேர்ந்த 50 வயதான நபர் தனது மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த 09 ம் திகதி தனது வீட்டில் தனிமையில் இருந்த சமயம்,அங்கு மது போதையில் வந்த மருமகன் அவரை தாக்கியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து தாக்குதலுக்கு இலக்கான நபர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை தாக்குதலை மேற்கொண்ட நபர் மந்திகை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *