வீதியில் இருந்து சடலம் மீட்பு..!

இன்று காலை 26 வயதுடைய ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பதுளை மஹியங்கனை பிரதான வீதியில் கந்த கெட்டிய எவெந்தாவ பிரதேசத்தின் வீதி ஒன்றிலேயே சடலமொன்று கண்டு எடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் பதுலுஓயா, எவெந்தாவ பகுதியை சேர்ந்த திஸாநாயக்க முதியன்சலாகே நந்தன நந்தன குமார என தெரிவிக்கப்படுகிறது.

இறந்தவரின் தலையில் காயங்கள் இருந்ததாகவும் ​பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காட்டு யானையின் தாக்குதலினால் இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில்,இந்த மரணம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *