கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு..!

35 வயதுடைய பெண்ணொருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவமானது கிரிந்திவெல ஊராபொல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.உயிரிழந்த பெண் கே.ஏ.சஞ்சீவனி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் பல வருடமாக வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில்.கணவரின் தாய்,தந்தை,மற்றும் கணவரின் சகோதரன் ஆகியோருடன் கணவரின் தாய் வீட்டில் வசித்து வந்த நிலையிலேயே இந்த கொலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த பெண் வீட்டின் வரவேற்பறையில் கிடப்பதைக் கண்ட கணவரின் தாயார், சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் தாயாருக்கு அறிவித்ததுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பூகொட நீதிமன்ற பதில் நீதவான் கமல் சம்பந்த பெரும பிரேத பரிசோதனையை மேற்கொண்டதுடன்,சடலத்தை வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல உத்தரவிட்டதுடன், அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் மைத்துனர் (கணவரின் சகோதரன்) கொலைக்குப் பின்னர் தலைமறைவாகியுள்ளதுடன்,
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *