எலி கடித்து குழந்தை பலி…!

வீட்டை அசுத்தமாக வைத்திருந்ததன் காரணமாகவும்,பெற்றோரின் அசமந்த போக்கின் காரணமாகவும் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் இண்டியானா என்ற பகுதியில் இச்சம்பவமானது பதிவாகியுள்ளது.

பெற்றோர்கள் குழந்தையை தூங்க வைத்து விட்டு தமது வேலைகளில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு வந்த எலிகள் குழந்தையை கடிக்க ஆரம்பித்துள்ளன.அதன் போது குழந்தை அழ தொடங்கியுள்ளது. இச்சத்தத்தை கேட்ட பெற்றோர்கள் சென்று பார்த்துள்ளனர் அதன் போது குழந்தையை எலி கடித்துக் கொண்டு இருந்துள்ளது.இதன் போது குழந்தையை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர் பெற்றோர் .எனினும் குழந்தை உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், வீடு முழுவதும் அசுத்தமாக காணப்படுவதால் எலிகள் வந்துள்ளாதாகவும்,பெற்றோர்கள் கவனயீனமாக இருந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *