புத்தகத்தில் மயிலிரகை வைத்து ரசித்த காலம்..!

பாடசாலை காலம்

படிக்கும் காலங்களில் பகிர்ந்து வாழும் அற்புதத் தருணம்!

நட்பின் வலிமை அறிந்த தருணம்!

ஒழுக்கத்தின் நெறியை அறியும் ஓங்கார தருணம்!

கரும்பலகையின் முன் கட்டெறும்பாய் படித்த தருணம்!

புத்தகங்களுக்குள் மயிலிறகை ரசித்த தருணம்!

அகிலத்தை தன் கண் முன் கானலாக கொண்டு வந்து ஆசான் நடத்திய தருணம்!

மணி அடித்ததும் மகிழ்ச்சியில் திளைத்த தருணம்!

*
பண்டங்களை பகிர்ந்து உண்ணும் தருணம்!

அனைவரும் ஒரே ஆடைகளை அணிந்த தருணம்!

வீட்டுப்பாடம் எழுதாததால் அடி வாங்கி அழுத தருணம்!

கேள்விகளைக் கேட்கும் போது விடை தெரியாமல் நெளிந்த தருணம்!

பிறந்த நாளில் நண்பர்களின் பரிசு பொக்கிஷமான தருணம்!

தேர்வு நாட்களில் தேர்வுத்தாள் பயந்து வாங்கிய தருணம்!

விடுமுறை என்றதும் குதூகலமாக ஆனந்த தருணம்!

அனைத்துமே எங்கள் பாடசாலை காலம் அற்புதமாக ரசித்த பொக்கிஷம்! *நிலவுத்தோழி ஆர் ஜே உமாதேவி*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *