காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு..!

காலி சிறைச்சாலையில்  29 வயதான  கைதியொருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொட்டவகம பிரதேசத்தை சேர்ந்த குறித்த கைதி, காய்ச்சல் காரணமாக கராபிட்டிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே  சிசிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

கடந்த வாரத்தில் மாத்திரம்,  மாத்தறை சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ள நிலையில்,

சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக  சிறைச்சாலைகளில் கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *