பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் பலி..!

26 வயதுடைய அலெக்ஸ் என்ற இளைஞன் 08ம் திகதி கைது செய்யப்பட்டு 10ம் திகதி மல்லாவி நீதி மன்றத்தினால் விளக்க மறியலில் வைக்கப்பட்டு இருந்த நிலையில் பொலிஸாரினால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

கடுமையான தாக்குதலுக்கு உள்ளானதால் துரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் இன்றைய தினம் மதியம் யாழ் போதன வைத்தியசாலையில்,சட்டவைத்திய அதிகாரி உ. மயூரதனால் உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இறப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சித்தன்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும்,இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

உடற்கூற்று பரிசோதனையில் இயற்கை மரணமில்லை எனவும் சித்திரவதை மற்றும் அடி காயமே உயிரிழப்பிற்கு காரணம்,என தெரியவந்துள்ள நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ்,உப பரிசோதகர் உள்ளிட்ட நால்வரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *