6வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை..!

உடல் எடை அதிகரித்ததன் விளைவாக 6 வது மாடியில் இருந்து கீழே குதித்து மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவமானது இந்தியாவின் கன்னட மாவட்டம் மங்களூரு டவுன் ,குந்திகான் என்ற பிரதேசத்தில இடம் பெற்றுள்ளது.

பிரக்ருதி ஷெட்டி என்ற 20 வயதுடைய மருத்துவத்துறையில் கல்வி பயின்று வந்த மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அவரது அறையிலிருந்து ஒரு கடிதத்தையும் மீட்டுள்ளனர்.இதன் போது “எனது உடல் மிகவும் பருமனாக உள்ளது.உடல் எடையை குறைக்க கடுமையான பயிற்ச்சிகள் மேற்கொண்டேன்.ஆனால் அது பலன் அளிக்கவில்லை.அடிக்கடி உடல் நலனும் பாதிக்கப்பட்டுவருகிறது.எனவே வாழ்க்கையில் விரக்தியடைந்து நான் தற்கொலை முடிவை தேடிக்கொள்கிறேன்.எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள் “என குறிப்பிடப்பட்டிருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *