அதிகரித்து வரும் டெங்கு நோய்..!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் டெங்கு நோய் பரவி வருவதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் நவம்பர் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில், 3 ஆயிரத்து 63 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும்,அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டிலுள்ள 44 சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் அதி டெங்கு வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அப்பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே, டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை இனங்கண்டு,

அவற்றை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *