மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு மடங்காக அதிகரிப்பு..!

பொருளாதார பிரச்சினைகாரணமாக பலர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார பிரச்சினை மற்றும் எதிர்காலம் தொடர்பான உத்தரவாதம் இன்மை போன்ற காரணங்களினாலேயே மனநல பாதிப்பு அதிகரித்துள்ளதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அன்றாட உணவிற்கே மக்கள் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளதால்.தமது பிள்ளைகள் ,தமது எதிர்காலம் என எண்ணி மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை மனநல வைத்தியர்களை சந்திக்க வரும் நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *