வாகன விபத்தில் பெண் பலி..!

அண்மைக்காலமாக வாகன விபத்துக்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. இதன் காரணமாக பலர் உயிரிழந்தும் பலர் தமது அங்கங்களை இழந்தும் பெரும் கஷ்டத்தை எதிர் நோக்குகின்றனர்.

இவ்வாறான நிலையில் தான் இன்றைய தினமும் ஒரு விபத்து நடந்துள்ளது .இதன் காரணமாக ஒரு பெண் உயிரிழந்ததுடன்,23பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பே புஸ்ஸவிலிருந்து அலவ்வ நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பஸ்ஸும் எதிரே வந்த சீமெந்து ஏற்றி வந்த கனரக வாகனமும் வரக்காபொல துல்ஹிரிய பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதில் இவ்விபத்து நடந்துள்ளது.

இதன் போது கனரக வாகனத்தின் சாரதியை கைது செய்ததோடு மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *