மீண்டும் மின் துண்டிப்பா…?

இலங்கை மின் சாரசபையானது மீண்டும் நாடு முழுவதும் மின் வெட்டினை அமுல்படுத்த வுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையின் கடுமையான தாக்கம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

நீர்மின் உற்பத்தி நாளுக்கு நாள் குறைந்து வருவதால் விவசாயத் தேவைகளுக்காக சமனல நீர்த்தேக்கத்திலிருந்து நீர் விடுத்தால் தென் மாகாணத்திற்கு 4 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடதக்கது

இதே வேளை மின்சார தேவையினை எரிப்பொருட்களின் மூலம் பூர்த்தி செய்வதாயின் 500 கோடி ரூபாவிற்கு அதிகமான இழப்பை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையினால் வறட்சி காரணமாக மின்சாரத்தை துண்டிப்பதை தவிர வேறு வழியில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *