குறைந்த விலையில் மின்சாரம்..!

குறைந்த விலையில் மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த செயற்திட்டமானது யாழ் தீவகத்தில் அமையப்பெற உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக டக்ளஸ் தேவாநந்தா கருத்து தெரிவித்திருந்தார்
“யாழ்ப்பாணத்தில் அனலைதீவு உள்ளிட்ட சில தீவுகளில் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது.

அந்த மின் உற்பத்தி நிலையங்கள் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படாது.

அதனால் அந்த பகுதியில் உள்ள மக்களிற்கு குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் பேசவுள்ளேன்.

அத்துடன் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படவுள்ள மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்திகள் அனுராதபுரம் மின் கட்டமைப்புடன் இணைக்கப்படுவதால் எவ்வித பாதிப்பும் இல்லை.

சிலர் குழப்புவதற்காக இவ்வாறு கூறுகின்றனர். விரைவில் அதானி தரப்பினரை சந்திக்க உள்ளேன்.

அந்த சந்திப்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளேன்” இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *