தடையின்றிய மின்சாரம் கிடைக்குமா..?

கடுமையான வறட்சியின் காரணமாக மின்சார தடையானது ஏற்படுத்தபபடும் என அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தது. எனினும் முடிந்த வரையில் மின்சார தடை ஏற்படுத்தாமல் மக்களுக்கு மின்சாரத்தை வினியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நுரைச்சோலை நிலக்கரி ஆலையில் உள்ள மின் உற்பத்தி இயந்திரம் ஏற்கனவே செயலிழந்துள்ளது.

இது தொடர்ச்சியான மின்சார விநியோகத்திற்கு தடையாக இருக்குமா என இலங்கை மின்சார சபையிடம் வினவப்பட்டுள்ளது.

தற்போது செயலிழந்துள்ள நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை எதிர்வரும் செவ்வாய்கிழமைக்குள் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க முடியும் என சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தில் 03 மின் உற்பத்தி இயந்திரங்கள் உள்ளன, அவற்றில் ஒன்று தற்போது பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, அந்த ஆலையில் தற்போது ஒரு ஜெனரேட்டர் மட்டுமே இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாக இருப்பினும் தடையற்ற மின்சாரம் கிடைக்குமாயின் அது மக்களுக்கு ஓர் வரப்பிரசாதமாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *