உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவி உயிரோடு இல்லை..!

நேற்றைய தினம் உயர்தரப்பரீட்சையின் முடிவுகள் வெளியாகியது. இதில் வணிக பிரிவில் தோற்றி மூன்று A சித்திகளை பெற்ற ஒரு மாணவி, அவரது பெறுபேறுகளை பார்வையிட அவரே தற்போது உயிரோடு இல்லை.

திடீர் தலைவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்துள்ளார்.இந்த மாணவிக்கு வெளியாகிய உயர்தர பரீட்சை பெறுபேற்றில் மூன்று பாடங்களிலும் 3 A பெறுபேறுகள் கிடைத்துள்ளன.

இவ்வாறு உயிரிழந்த மாணவிக்கு அதிவிசேட பெறுபேறு கிடைத்தமை அப்பகுதியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியின் உயர்தரப் பாடசாலை மாணவியான 19 வயதுடைய விஹகன ஆரியசிங்க என்ற மாணவிக்கே இந்தப்பெறுபேறு கிடைத்துள்ளது.

சிலர் இறந்தும் வாழ்வார்கள் என்பது போல இவரிடம் இருந்து எடுக்கப்பட்ட இதயம் ,கல்லீரல் ,கண்,சிறு நீரகம்,நுரையீரல் என்பன ஏழு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டு அவர்கள் தேக ஆரோக்கியத்தோடு வாழ்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *