வாள் வெட்டு ,தீ வைப்பு சம்பவத்தில் இளம் பெண் பலி

பிறந்த தின கொண்டாட்டம் சோகத்தில் முடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வவுனியா தோணிக்கல் என்ற பிரதேசத்தில் வசிக்கும் சுரேஷ் என்பவருடைய வீட்டில் பிறந்த தினம் வைபவம் நிகழ்த்தப்பட்டிருந்த வேளையில் வாள் வெட்டு தீ வைப்பு போன்ற குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன.

இதன் போது 24 வயதுடைய இளம் பெண் ஒருவர் உயிரிழந்ததோடு 02 வயது குழந்தை,07,13 வயதுகள் உடைய இரு சிறுமிகள் 19தொடக்கம் 41 வயதிற்கு உட்பட்ட 4 பெண்கள் ,36 மற்றும் 42 வயதுடைய இரு ஆண்கள் என்போர் தீயில் சிக்கி காயமடைந்துள்ளனர்.

இவர்கள் தற்போது வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டள்ளதோடு,ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை குறித்த வீடு முற்றாக தீயில் எறிந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா மொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *