நோட்டன்ப்ரிஜ் சிறுவன் சடலமாக மீட்பு

நோட்டன் ப்ரிஜ்,கொத்தேலேன, முருத்தலவத்த பகுதியில் சிறுவன் ஒருவன் தூக்கிட்டு தொங்கிய நிலையில் நேற்று மாலை (01.07.2023) அன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

13வயதுடைய s. பிரதாப்சீன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.சடலம் பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலிய வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சிறுவன் ஆட்டு தொழுவத்தில் வைத்து தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டான் என்பது குறிப்பிட தக்கது.மேலும் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சிறுவனின் உயிரிழப்பு அனைத்து மக்களையும் கவலைக்குட்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *