மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!

மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 09 ஆம் கம்பம் கெம்பிலிதியெத்த புராதன விகாரைக்கு முன்பாக இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 16 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த மோட்டார் சைக்கிள் வீதியில் சறுக்கி எதிர்திசையில் வந்த பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரும் பின்னால் அமர்ந்து சென்ற மகளும் மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 16 வயதுடைய மகள் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கஹபத்வல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *