பள்ளி வாசல் ஒன்றின் காவலாளி கொலை..!

பள்ளி வாசல் ஒன்றிற்கு காவலாளியாக இருந்த நபர் ஒருவரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தாக்குதலுக்கு இலக்கான நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவமானது ஹட்டன் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹட்டன் ஜும்மா பள்ளி வாசலில் கடமையில் ஈடுப்பட்டிருந்த ஹட்டன் ஹிஜ்ர புர பகுதியை சேர்ந்த 67 வயதான இப்ராஹிம் என்பவறே இவ்வாறு தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பள்ளி வாசலில் பல தடவைகள் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுவதை தடுத்து நிறுத்துவதற்கே குறித்த பள்ளி வாசலுக்கு காவலாளி நியமிக்கப்பட்டதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவருகிறது.

சந்தேக நபர் பள்ளிக்குள் வருவது உண்டியலை உடைப்பது போன்ற காணொளிகள் cctv கெமராவில பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *