சடலமாக மீட்கப்பட்ட தர்மிகா தொடர்பாக உடனடி விசாரணை..!

நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்ட தர்மிகா தொடர்பாக உடனடியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வட மாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

சிரேஸ்ட பொலிஸ்மா அதிபரிடமும் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடமும் இது தொடர்பாக விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதே வேளை இவ்வாறான சம்பவங்கள் நிகழாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகள் மீது கவனாமாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை சிறுவர்களை வேலைக்கு அமர்த்தாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *