கணவனின் தொந்தரவினால் வீட்டை விட்டு வெளியேறிய பெண்..!

கணவனின் தொந்தரவு காரணமாக இளம் பெண் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ராத்தங்கொட தோட்டம் புதுக்காடு பகுதியில் வசித்து வந்த இளம் தாய், தனது ஒன்றரை வயது குழந்தையுன் கடந்த 17ம் திகதி முதல் காணாமல் போயிருந்தார்
ரிக்கிலகஸ்கட வைத்தியசாலைக்கு செல்வதாக குழுந்தையையும் தூக்கிக்கொண்டு, தனது கணவனிடம் கூறி சென்ற அப்பெண், அன்றையதினம் வீடு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே பதற்ற​மடைந்த கணவன் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலை மற்றும் பல இடங்களில் தேடிய பின்னர் ஹங்குராங்கெத்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய ஹங்குராங்கெத்த பொலிஸார் அந்த பெண் சென்ற இடங்களில் உள்ள சி.சி.டிவி கெமெராவில் பதியப்பட்ட காட்சிகள் மூலமாக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து ஹங்குராங்கெத்த பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த பெண்,

தன்னுடைய குழந்தையுடன் அவிசாவெல்ல பிரதேசத்தில் இருப்பதாக ​ஹங்குராங்கெத்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அவிசாவெல்ல பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

அதனையடுத்து அந்த பெண் இருக்கும் இடத்தை தேடி கண்டுப்பிடித்து தாயும் பிள்ளையையும் மீட்டுள்ளனர்.

கணவனின் தொந்தரவு காரணமாகவே இந்தப் பெண் வீட்டை வீட்டு வெளியேறியதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

அப்பெண்ணின் கணவன், திங்கட்கிழமை (24) தற்கொலை செய்து கொள்ள முயன்றதை அடுத்து, காப்பாற்றப்பட்டு ரிக்கிலகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *