உலக கிண்ண தகுதி காண் தொடரில் இலங்கை அணி வெற்றி..!

இந்தியாவில் நடைப்பெற இருக்கும் ஒரு நாள் உலககிண்ண தொடருக்கான தெரிவுகாண் போட்டியில், இன்றைய தினம், இலங்கை சிம்பாபே அணிகளுக்கிடையிலான உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் சிம்பாபே அணியை வீழ்த்தி 9 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

இதன் மூலம் உலக கிண்ண தொடருக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட சிம்பாபே அணியை பணித்தது. இதன் பிரகாரம் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாபே அணி 32 ஓவர்களில் 165 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.166 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுதாடிய இலங்கை அணி 33.1ஓவரில் ஒரு விக்கட்டினை இழந்து 169 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

இதில் சிறப்பாக பிரகாசித்த பெத்தும் நிஸ்ஸங்க 101 ஓட்டங்களை பெற்றார். இலங்கை அணியை சேர்ந்த பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசி தமது பங்களிப்பை வழங்கியமையே இவ்வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *