ஹாலிஹெல்ல பிரதேசத்தில் வாகன விபத்து…!

இன்றைய தினம் காலை பதுளை – பண்டாரவளை வீதியில் ஹாலிஹெல்ல பகுதியில் கார் ஒன்று வீதியில் இருந்து விலகி மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், இரு சிறுவர்கள் உள்ளிட்ட 4 நபர்கள் காயங்களுடன் பதுளை பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

52 வயதான ரொசான் சரின் ஜேகப் என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.இவர் சுற்றுலா விடுதியை நடாத்திவருபவர் என்பது குறிப்பிடதக்கது.

இன்றைய தினம் சமயநிகழ்விற்கு சென்று கொண்டிருக்கும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *